Tuesday, April 22, 2008

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது



துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு 17.04.2008 வியாழன் மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘சிராஜுல் உம்மத்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.


சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக்கவிதையினை வாசித்தார்.


'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உணர்ச்சிப்பூர்வ உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணாமான வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.


பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


செய்தி : மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி

Saturday, April 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, April 9, 2008

துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை

துபாய் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை

துபாய் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நிகழ்ச்சியில்



துபாய்

சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நிகழ்ச்சி


அஸ்கான் சமுதாயக் கூடம், டி பிளாக்

சிறப்பு பேச்சாளர் : மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ

தலைமை இமாம், பெரிய பள்ளிவாசல், முதுகுளத்தூர்


தலைப்பு : இஸ்லாத்தில் இறைநேசச் செல்வர்கள்

அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை நிகழ்வில்

துபாய் ஈமான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளருடன்

துபாய் இந்திய துணைத்தூதரக கன்சல் ( லேபர் ) திருமிகு பி.எஸ். முபாரக் அவர்களுடன்

புகைப்படங்கள்






துபாய் - அல் கிஸஸ்




ஏப்ரல் 08, 2008
செவ்வாய்க்கிழமை

துபாய் - அல் கிஸஸ்

Tuesday, April 8, 2008

துபாய் கிஸஸ் அல் நஹ்தா






08 ஏப்ரல் 2008
செவ்வாய்க்கிழமை

ஏற்பாடு : எஸ்.என். பக்ருதீன் & ஆர். சாகுல் ஹமீது

இனிய திசைகள்

துபாய் கிஸஸ் அல் நஹ்தா நிகழ்வில்...


துபாய் கிஸஸ் அல் நஹ்தா நிகழ்வில்...

நாள் : 08 ஏப்ரல் 2008 செவ்வாய்கிழமை மாலை

அபுதாபி ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிகழ்வு



அபுதாபி ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிகழ்வு

04 ஏப்ரல் 2008

வெள்ளிக்கிழமை

விரிவான செய்தி விரைவில்.............

அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை நிகழ்வில்



அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை நிகழ்வில் பங்கேற்றோர்..............

துபாய் அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை நிகழ்ச்சியில்....




துபாய் அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவையின் சார்பில் கவிஞர் அபிவை தாஜுதீனுக்கு பாராட்டு விழா ஏப்ரல் 05 அன்று கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.

இதில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் வாழ்த்துரை நிகழ்த்தினார்.

நாகூர் இ.எம். ஹனிபா அவர்கள் பாடிய பல பாடல்களை எழுதியவர் கவிஞர் அபிவை தாஜுதீன் ஆவார்.

விரிவான செய்திகள் விரைவில்

DIBBA

Wednesday, April 2, 2008

துபாய் இப்ன் பத்தூதா மால்

துபாய் கல்விக் கண்காட்சியில் முதுவை மருத்துவர் டாக்டர் அமீர்ஜஹானின் ஏ.ஜே அறக்கட்டளை பங்கேற்பு


துபாய் கல்விக் கண்காட்சியில் முதுவை மருத்துவர் டாக்டர் அமீர்ஜஹானின் ஏ.ஜே அறக்கட்டளை பங்கேற்பு
மௌலவி பஷீர் சேட் - ஐக்கிய ஜமாத்தினர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்




துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம் அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி, ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம், சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.