Wednesday, October 21, 2009

ஹஜ் குறித்த கட்டுரைகள்

KuwaitKaleelbaqavi: ஸலாம்... நமது உலமா பேரவை இணையதளத்தில் இன்ஷா அல்லாஹ் ஹஜ் குறித்த கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகும். தேவைப்பட்டால் பிரிண்ட் போட்டு மக்களுக்கு விநியோம் செய்யலாம். குறைந்தபட்சம் ஹஜ் செல்லும் மக்களுக்காவது கொடுக்கலாம். www.ulamaa-pno.blogspot.com

3:05 PM ஸலாம்... நமது உலமா பேரவை இணையதளத்தில் இன்ஷா அல்லாஹ் ஹஜ் குறித்த கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகும். தேவைப்பட்டால் பிரிண்ட் போட்டு மக்களுக்கு விநியோம் செய்யலாம். குறைந்தபட்சம் ஹஜ் செல்லும் மக்களுக்காவது கொடுக்கலாம். www.ulamaa-pno.blogspot.com

Friday, September 4, 2009

YSR and Muslims

YSR and Muslims
by Ayub Khan

The tragic death of Y.S.Rajashekhara Reddy is undeniably a loss for Andhra Pradesh's Muslim community. Among all the current chief ministers he stands out for taking proactive measures to improve the socio-economic status of the Muslim community.

Among his prime contributions for the Muslim community was the extension of limited reservations for Muslims in the state which has benefited many a student. His interest in return Waqf properties was also applauded by the Muslim community. He was personally involved in returning to the Waqf Board 50 acres of prime land belonging to Dargah Hazrat Baba Sharfuddin which had been encroached by a state corporation. The present value of this land stands at Rs. 350 crore. Such measures had led the senior most Muslim leader of Hyderabad Maulana Aquil Husami to remark that, 'we have never seen such a chief minister.'

He had also sanctioned a Rs.2,000 crore special package for the development of Old City. YSR was also instrumental in solving the issue of sanctioning houses for the ex-servicemen of the old Hyderabad Army. This problem had been languishing in cold storage for more than forty years until YSR revived it at the urging of the All India Majlis-e-Ittehadul Muslimeen. He enjoyed a close relationship with the AIMIM and most of his minority development projects were urged on by the latter's leadership.

However, despite his close relationship with the Muslims YSR's government's actions were not always in tune with the sentiments of the community. His government was unable to control the reckless actions by the police in the aftermath of the Makkah Masjid bomb blasts. Many innocent Muslim youth were rounded up for apparently no fault of their own. He was similarly unable to prosecute the perpetrators of the Bhainsa riots last year who had burned a Muslim family to death. Many blamed his then home minister for the lapse but being the CM he was also held partly responsible.

YSR also did not take any effective measures to improve and groom the Muslim leadership in the Congress party. Last elections saw two Congress stalwarts Fareeduddin and Ali Shabbir losing their seats. In the case of Fareeduddin it was alleged by some that he was deliberately denied a seat in his hometown and moved to Hyderabad where he lost to a BJP candidate. It was alleged that YSR had done so at the urging of a mining tycoon from Karnataka who had wanted the lone BJP member in Andhra Pradesh to reclaim his seat.

In earlier allegations, YSR was also accused of trucking in rioters, during the reign of the late Chief Minister Chenna Reddy, from Rayalaseema to foment communal trouble in the Old City. The supposed motive was to create instability in the Chenna Reddy government. He always denied it and was given a clean chit by an enquiry commission.

Whatever the veracity of such accusations the YSR in the role of the Chief Minister has been a friend for the Muslim community---warts and all. It remains to be seen how the new Chief Minister of Andhra Pradesh will tread the path paved by YSR or digress from it. If YSR's son Jaganmohan Reddy assumes the office then one expects that he continues his father's legacy. Jaganmohan Reddy is also on friendly terms with AIMIM's leadership.




\

Wednesday, September 2, 2009

பெற்றோர்களை பேணுவோம்!

பெற்றோர்களை பேணுவோம்!

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0826-take-care-of-parents.html

ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!

முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! "முன் செய்யின் பின் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: "எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக" என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள். கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?

எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது! அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார், தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வவ்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள். மாறாக பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது" எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!

முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! "முன் செய்யின் பின் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: "எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக" என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள். கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?

எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது! அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார், தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வவ்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டேன். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=153

Wednesday, August 26, 2009

திருமறை வந்த தேன்மாதம் வருகிறது

திருமறை வந்த தேன்மாதம் வருகிறது
பொற்கிழி கவிஞர் மு. சண்முகம், இளையான்குடி

*ரமலான் வருகிறது !
நலமள்ளி வருகிறது !
கமழும் புகழ் நோன்பைக்
கைகோர்த்து வருகிறது !

*ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மானம் செய்ய
திருநோன்பு வருகிறது

*அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வருகிறது !
திருமறை வந்த
தேன்மாதம் வருகிறது !

*தக்வாவை கொஞ்சம்
தட்டிடவே வருகிறது !
ஹக்கனவன் கனிவையும்
அறிவிக்க வருகிறது !

*அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த நல்அமலை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வருகிறது !

*பத்திய மாதமென்று
பறைசாற்றி வருகிறது !
உத்தம ஸஹாபாக்கள்
உவந்த மாதம் வருகிறது !

*பசியின் ருசியறிய
பாங்கோடு வருகிறது ! – கல்பில்
கசியும் ஈரத்தைக்
காட்டிடவும் வருகிறது !

*கஸ்தூரிவாசம்
கமகமக்க வருகிறது !
கைகளை ஈகையால்
அலங்கரிக்க வருகிறது !

*ஏழை வீதீகளும்
புன்னகைக்க வருகிறது
எல்லோர் மனங்களுக்கும்
சுகம் சேர்க்க வருகிறது !

*கலிமாவில் நாவெல்லாம்
கலந்திட வருகிறது !
தொழுகை தவறாதேயென
தூது சொல்லி வருகிறது !

*லைலத்துல் கத்ரென்னும்
ரம்மிய இரவுதனை
தொழுகையால் அலங்கரிக்க
சோபனமாய் வருகிறது !

*அன்று பத்ருப் போரில்
அண்ணலார்க்கு வெற்றியினை
தந்து பரிசளித்த
தனிமாதம் வருகிறது !

*நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாதம் வருகிறது !
மாண்பில் நாம் மகிழ – இபாதத்
மணமள்ளி வருகிறது !

*ரமலான் வருகிறது
நலம் கொண்டு வருகிறது !
கமழும் புகழ் நோன்பைக்
கைகோர்த்து வருகிறது !

Monday, August 24, 2009

”மன நிறைவுடன் தாயகம் திரும்புகிறேன்” ! “முதுவைக் கவிஞர்” நெகிழ்ச்சி அறிக்கை !!

”மன நிறைவுடன் தாயகம் திரும்புகிறேன்” ! “முதுவைக் கவிஞர்” நெகிழ்ச்சி அறிக்கை !!

மிகக்குறுகிய காலப் பயணத்தில் துபை வந்திருந்த முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாஅத் தலைவரும், முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைச் செயலாளருமான முதுவைக் கவிஞர், மவ்லவி ஹாஜி உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ அவர்கள் 30.05.2009 சனிக்கிழமை மாலை துபையிலிருந்து தாயகம் புறப்பட்டார். புறப்படும்போது அவர் அளித்த அறிக்கையில் தான் மன நிறைவுடன் தாயகம் திரும்புவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

”14 நாட்கள் குறுகிய காலப் பயணத்தில் இலக்கிய நிகழ்வை ஒட்டி நான் துபை வந்திருந்தபோது தமிழ் இலக்கியத்திலும், சன்மார்க்க மேடைகளிலும், சமுதாய அக்கரையிலும் தமிழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் துடிப்பான ஆர்வத்துடன் கலந்து சிறப்பிப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

”ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் திரளாகக் கலந்து கொள்வதோடு நிகழ்ச்சி முடியும் இறுதி நேரம் வரை ஆர்வத்தோடும், அமைதியோடும் அமர்ந்திருக்கும் ஒழுக்கமும் அழகும் நல்ல பண்பாட்டை உணர்த்துகிறது. கருத்துச் சொல்லும் பெருமக்களும் இது மன உற்சாகத்தைத் தருகிறது.”
”குறிப்பாக முதுகுளத்தூர் - தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத்தார்கள் குடும்பத்தோடு வருகை தந்து குதூகலத்துடன் மனம் மகிழ்ந்து செல்வதைக் காணும் போது உண்மையிலேயே மனம் நெகிழ்ச்சி அடைகிறது.”

”மஸ்ஜிதுகளில் ஆனாலும், அரங்கங்களில் ஆனாலும் சந்திப்பு நிகழ்ச்சிகளில் ஆனாலும் வெகுதூரத்திலிருந்து மக்கள் வந்து கலந்து கொள்வது நல்லதொரு முன்னேற்றத்திற்கு அறிகுறியாகும்.”

சமுதாயக் கவிஞர் என்ற பொருளில் “ஷாயிருல் மில்லத்” என்ற விருதை முதுகுளத்தூர் – ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் எனக்கு அளித்து கவ்ரவித்தது அவர்களின் பெருமனதையும், என் மீதுள்ள பாசத்தையும் எடுத்துக் காட்டுகிறது. மென்மேலும் இந்த உயர்வும் ஒற்றுமையும் ஏற்றம் பெற வேண்டும் என இதயம் குளிர்ந்த நன்றியுடன் இறைவனை வேண்டுகிறேன்.

எனக்கு இந்த உற்சாக வரவேற்புகளை அளித்த முதுகுளத்தூர், தேரிருவேலி, கீழக்கரை, திட்டச்சேரி மற்றும் அனைத்துப் பிரமுகர்களுக்கும் என் உளக்குளிர்ச்சியான நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்த வல்ல அல்லாஹ்வுக்கும், ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினருக்கும் நன்றி கூறுகிறேன்.
அமீரக முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தார்களின் தூய சேவையை அல்லாஹ் கபூல் செய்து மேலும் பல உயர்வுகளையும், குறைவில்லாச் செல்வத்தையும் அருள துஆச் செய்கிறேன்.
மன நிறைவுடன் தாயகம் திரும்புகிறேன்.

அனைவருக்கும் நன்றி ‘அஸ்ஸலாமு அலைக்கும்’

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரமளானும் அல்குர்ஆனும்

ரமளானும் அல்குர்ஆனும்

( மவ்லவி அல்ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி – திருப்பூர் )

நோன்பும் குர்ஆனும்

சங்கை மிகுந்த ரமளான் மாதம் நம்மிடையே வருகை புரிந்துள்ளது. குறைந்த காலத்தில் குறைந்த செயலின் மூலம் அதிகமான நன்மை களை நமக்கு பெற்றுத்தரும் மாதமாகும் இது. இம்மாதம் குறித்து அல்லாஹு தஆலா,

“ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.”
-அல்குர்ஆன் (2:185) என்று கூறுகிறான். அவ்வாறு ரமளானில் அருளப் பட்ட குர்ஆனைக் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது


“நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வதற்கும் அவனிடம் நெருங்குவதற்கும் உதவியாக அவனிடமிருந்து வந்த குர்ஆன் ஷரீ பைத் தவிர வேறு சிறந்த பொருளை பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்கள் : ஹள்ரத் அபூதர் (ரளி) நூல் : ஹாகிம்

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தரும் அற்புத வேதமான குர்ஆன் ஷரீபை அல்லாஹுதஆலா குர்ஆனின் அதிகமான வசனங் களை ரமளான் மாதத்தில் தான் இறக்கி வைத்துள்ளான். நோன்பை நமக்கு கடமையாக்க விரும்பிய அல்லாஹுதஆலா குர்ஆன் இறக்கி அருளப்பட்ட ரமளான் மாதத்தை நோன்பு மாதமாக தேர்ந்தெடுத்தான். குர்ஆனில் கூறப்பட்ட பெரும்பாலான விஷயங்களை மனிதன் உடனடி யாக செயல்படுத்தும் முகமாக குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தையே நோன்பை நோற்க கடமையாக்கி இரவில் நின்று வணங்குவதையும் வலியுறுத்தினான். நோன்பு வைப்பதின் காரணமாக மற்ற மாதங்களில் தொழுகை மற்றும் இன்ன பிற விஷயங்களில் கவனக் குறைவாக இருக்கும் முஃமின்கள் ரமளான் மாதத்தில் தொழுகை மற்றும் தான தர்மங்கள் செய்வது என்ற நிலையில் முஃமின்கள் ஈடுபடுகின்றனர். குர்ஆன் கூறும் தொழுகை, தான தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை உடனடியாக அமல் செய்யும் விதமாக ரமளான் மாதம் அமைகிறது.

அனைத்தும் உள்ளடக்கிய அல்குர்ஆன்

குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனைப்பற்றி சில விஷயங்களை நாம் நினைவு கூர்வோம். குர்ஆனில் அல்லாஹ் இம்மை, மறுமை மற்றும் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளான். குர்ஆனில் அல்லாஹ் கூறாத விஷயங்களே இல்லை. இருப்பினும் அண்ணலார் (ஸல்) அவர்கள் குர்ஆனில் பொதிந்துள்ள விஷயங்களை ஐந்து அம்சங்களில் உள்ளடக்கி கூறுகிறார்கள்.

“புனித குர்ஆனில் ஐந்து விஷயங்கள் உள்ளன. 1. ஹலால் (ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள்) 2. ஹராம் (விலக்கப்பட்ட விஷயங்கள் 3. முஹ்கம் (தெளிவான மொழிநடை கொண்ட வசனங்கள்) 4. முதஷா பிஹாத் (மறைவான விஷயங்களான சுவனம், நரகம் அர்ஷ் போன்ற விஷயங்களை கூறும் வசனங்கள் 5. உதாரணங்கள் கூறும் வசனங்கள்.


இவ்வாறு குர்ஆனில் ஹலால் என்று கூறப்பட்டுள்ள விஷயங்களை ஹலால் என்று கருதுங்கள். ஹராமை ஹராமாக கருதுங்கள். கொள்கைகள் கோட்பாடுகள் சட்டங்கள் ஆகியவற்றை கூறும் முஹ்கம் வசனங்கள் படி செயல்படுங்கள். மறைவான விஷயங்களை சுவர்க்கம், நரகம், அர்ஷ் ஆகியவற்றை விபரிக்கும் முதஷாபிஹான வசனங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அதனை துருவி ஆராய முற்படாதீர்கள். முந்தைய சமுதாயங்கள் அழிந்து மடிந்தது பற்றிய படிப்பினை தரும் சம்பவங்களில் மூலம் படிப்பினை பெறுங்கள்.

அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: மிஷ்காத்.


குர்ஆன் முழுவதிலும் அல்லாஹ் கூறியுள்ள விஷயங்களை அண்ணலார் (ஸல்) அவர்கள் ஐந்து அம்சங்களில் பொதிய வைத்து கூறிவிட்டார்கள். குர்ஆனில் வழிகாட்டுதல் படி வாழ்வது என்பது சிரமத்திற்குரிய விஷயமல்ல. விளங்க முடியாத வேதாந்தத்தையோ புரிய முடியாத தத்துவத்தை குர்ஆன் கூறிவிடவில்லை. மிக எளிதாக பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இலகுவான வழிகாட்டுதல் களைத்தான் குர்ஆன் முன் வைக்கிறது.

உதாரணமாக மனித வாழ்க்கையின் நோக்கமென்ன? என்ற வினாவை முன் வைத்தால் இன்று அறிஞர்கள், யோகிகள் தவத்திரு என்று கூறிக்கொள்பவர்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள் என்றால் ஜீவன், முக்தி, ஆன்மா என்றெல்லாம் கூறி நம்மை குழப்பி விடுவார்கள். ஆனால் குர்ஆன் மிகமிக இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக விடை பகர்கிறது. மனித வாழ்வின் நோக்க மென்ன? தெரியுமா? “மனித இனம் இறைவனை வழிபட்டு வாழ வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளான்” என ஒற்றை வரியில் திருக்குர்ஆன் (51:56) பதில் பகர்கிறது. குர்ஆனின் கருத்துக் களும் வழிகாட்டலும் இலகுவானது என்பதை அல்லாஹ்வே தனது குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான். :இந்த குர்ஆனை அறிவுரை பெறு வதற்காக திட்டமாக நாம் எளிதாக்கி வைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுகிறவர் எவரேனும் உண்டா? (54:32) என்று அல்லாஹ் கேட்கிறான்.


பழங்கதை புத்தகமல்ல

திருக்குர்ஆனை ”வேதம்” என்றதும் அது பூர்வீகமான நூல் என்றதும் அதில் பழங்கதைகள் புராண இதிகாசங்கள் நிறைந்திருக்கும் என்று நாம் எண்ணி விடக்கூடாது. முற்காலம், தற்காலம் இனிவரும் காலம் ஏன் உலக அழியும் காலம் வரை உண்டான அனைத்து விஷயங்களை யும் அல்குர்ஆனில் காணலாம். அறிவியல் அற்புதங்களையும் குர் ஆனின் மூலமாக காணமுடியும். உதாரணத்துக்கு திருகுர்ஆன் கூறும் சில விஞ்ஞான சங்கதிகளை காணலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பூகோள வல்லுநர்கள் வானவியல் சம்பந்தமாக சில கருத்த்துக்களை குறிப்பிட்டனர். அதாவது “இந்த பிரபஞ்சம் நிபுலா என்ற பேரண்டத்தில் சேர்ந்திருந்தது. பின்பு அதிலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு தான் பால்வெளி உருவாயின” என்று கூறினர்.

இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே திருகுர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான். “நபியின் கூற்றை நிராகரிப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள் பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு நாம் அவற்றை தனித்தனியாக பிளந்தோம்.

-அல்குர்ஆன் (21:30)

தாவர வர்கத்திலும் ஜோடிகள் உண்டு

தாவர இனத்தைச் சார்ந்த பூக்கள், செடிகள், கனிகள் அனைத்திலும் ஆண்,பெண் என்ற இருபாலும் உண்டு. தாவரவியல் வல்லுநர்கள் இது குறித்து கூறும் பொழுது பூக்களில் “ஸ்டோமென்” (STOMEN) என்ற ஆண் இன அம்சமும், “ஓவன்ஸ்” (OVENS) என்ற பெண் இன அம்சமும் உண்டு. இவற்றிலிருந்து தான் கனிகள் உற்பத்தி ஆகின்றன என்று கூறு கின்றனர். அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் பதிவு செய்து வைத்திருக்கிறான். “ஒவ்வொரு கனி வகை தாவரங்களின் ஜோடிகளையும் அல்லாஹ் படைத்துள்ளான்.” – அல்குர்ஆன் (13:3) என்று குர்ஆனில் கூறுகிறான்.
ஆணிகளாக சிகரங்கள்

பூமியின் அமைப்பு குறித்து பூமி ஆய்வாளர்கள் கூறும்போது பூமியின் தூரம் 3750 மைல்களாகும். நாம் வாழும் பூமிப்பகுதி சுமார் 30 மைல்கள் வரையிலான பகுதி மெலிதான இலகுவான பகுதிகளாகும். மெலிதான பகுதி என்பதால் அதிர்வுகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அதிர்வுகளும் பூமி அசைவுகளும் ஏற்படாவண்ணம் மலைகள் தாங்கிப் பிடிக்கின்றன. அதாவது பூமியில் அடிக்கப்பட்ட ஆணிகள் போன்று மலைகள் பூமியின் அசைவை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இது நில ஆய்வாளர்களின் கூற்றாகும். ஆனால் அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் கூறி உள்ளான். “நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? மேலும் மலைகளை, முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?

-அல்குர்ஆன் (78:6, 21:31)

இனிக்கும் கடல்நீர்

உலகில் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த கடலிலும் அல்லாஹு தஆலா பல அற்புதங்களை ஏற்படுத்தியுள்ள தாக குர்ஆனில் கூறியுள்ளான். கடலில் மத்திய தரைக்கடலும் அட்லாண்டிக் கடலும் “ஜிப்ரால்டர்” என்ற பகுதியில் இணைகின்றன. மத்திய தரைக்கடல் சங்கமிக்கும் இந்த இடத்தில் அதன் நீரின் தன்மை மற்றும் சுவை மாறுபடுவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறிகிறார்கள். இவ்வாறு இருகடல்கள் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்கு புலப்படாத தடுப்பு போன்ற அமைப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தடுப்பை சைக்னாக் லைன் (PYCNOCLINE) பகுதி என்று கடல் ஆய்வாளர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். இவர்கள் தெரிவிக்கக் கூடிய இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே குர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான்.

”அல்லாஹ் எத்தகையவன் என்றால் இரு கடல்களையும் ஒன்றாக கலந்திடச் செய்துள்ளான். இது இனிமையானது. மதுரம் மிக்கது. மற்றொன்று உப்பும் கசப்பும் நிறைந்தது. (இரண்டும் ஒன்றோடொன்று கலந்திடாத வண்ணம்) இரண்டுக்குமிடையே மீற முடியாத ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி உள்ளான்.”

-அல்குர்ஆன் (25:53)


திருகுர்ஆனில் புதைந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த ஒரு நூலில் ஒரு அற்புத நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் “கப்தான் லாக் குஸ்ஸோ” என்ற பிரஞ்சு ஆராய்ச்சியாளர் கடலில் மூழ்கி ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த போது திடீரென்று அவரின் முகத்தில் மாட்டியிருந்த முகமூடி சற்று விலகுகிறது. அப்போது கடல்நீர் சிறிதளவு அவரின் வாயினுள் சென்று விடுகிறது. கடல் நீரை சுவைத்த அவருக்கு பெரும் ஆச்சர்யம். காரணம் வாயினுள் புகுந்த நீர் உப்பு கரிக்காமல் இனித்தது. “இது என்ன வியப்பாக இருக்கிறது. கடல்நீர் இனிக்கிறதே ! என்று நினைத்து சற்று தள்ளி இன்னொரு இடத்தில் நீரை சுவைத்துப் பார்த்தார்.


ஆனால் அந்த நீர் உப்பு கரிப்பாக இருந்தது. பெரும் வியப்படைந்த “கப்தான்” அவர்கள் கடலில் மேலும் பல இடங்களில் ஆராய்ந்து பார்த்தார். பெரும்பாலான இடங்களில் கடல்நீர் உப்பு கரிப்பாக இருந்தாலும் சில இடங்களில் நீர் தித்திப்பாக இருந்தது. இருவகையான நீரும் கலந்தே கடலில் இருந்தாலும் இரண்டுக்கும் மத்தியில் ஒரு ”வகையான” தடுப்பு இருப்பதைப் போன்று உணர்ந்தார். தனது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு வெளியில் வந்த கப்தான் இதைப் பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என நினைத்தார். அப்போது தான் அவருக்கு பிரஞ்சு ஆய்வாளர் டாக்டர் மாரீஸ் புகைல் அவர்களின் நினைவு வந்தது. ( இந்த மாரிஸ் புகைல் என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற “பைபிலும் குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை எழுதியவர் ) அவரிடம் தனது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்தோடு விபரித்தார். அப்போது அவர் “நான் சர்வசமய நூல்களையும் படித்து அதன் கருத்துக்களை ஆராய்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற இந்த விஷயம் முஸ்லிம் சமய வேதமான அல்குர்ஆனில் (25:53, 35:12, 55:19,20) ஆகிய வசனங்களில் தெளிவான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் சொல்வதைப் பார்க்கும் போது 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருகுர்ஆனில் இவ் விஷயம் பதியப்பட்டுள்ளது என நினைக்கும்போது பெரும் வியப்பாக உள்ளது” என பதில் பகர்ந்தார். சுப்ஹானல்லாஹ் ! குர்ஆனின் அறிவியல் விஷயங்களால் எண்ணிப்பார்க்கும் போது கடலை விட ஆழமான கருத்துக்கள், அறிவியல் விஷயங்கள் குர் ஆன் தன்னிடம் புதைத்து வைத்துள்ளது. என்று உறுதியிட்டு கூறமுடியும். குர்ஆன் எனும் இந்த ஆழ்கடலில் மூழ்கி அதன் அரிய கருத்துக்கள் எனும் முத்தை எடுக்க இந்த ரமளான் மாதத்தை விட சிறப்பான மாதம் வேறென்ன இருக்க முடியும்?


தேன்,தேனீ, திருகுர்ஆன்

மனிதகுலத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புத நோய் நிவாரணி தேன் என்பதில் இருகருத்து இருக்க முடியாது. அண்ணலார் (ஸல்) அவர்கள் தனது மருத்துவ வழிகாட்டுதலில் (திப்பநபவி) அதிகமான இடங்களில் தேனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவத்துறைகள் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ள இந்த தேனை உருவாக்கும் தேனியைப் பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்துள்ளார்கள். அவர்களில் “வான் பிரிஸ்க்” என்ற ஆய்வாளர். தேனீ பற்றி குறிப்பிடும் போது மலரி லிருந்து தேனீ அதன் சாற்றை உறிஞ்சி அதனை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு தேனீ சாறு கிடைக்கக்கூடிய மலர்களை கண்டால் உடனே அது திரும்பிச் சென்று மற்ற தேனீக்களுக்கும் குறிப்பிட்ட மலர்களை யும் அது இருக்கும் பகுதிகளையும் தெளிவான முறையில் விபரிப் பதாக குறிப்பிடுகிறார். இவ்வாறு அறிவிப்புச் செய்யும் தேனீயும் தேனை சேகரிக்க செல்லும் தேனீக்களும் அனைத்தும் பெண் தேனீக்கள் தான் என்றும் தன் ஆய்வில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை அல்லாஹு தஆலா தனது குர்ஆனில் தெளிவான முறையில் குறிப் பிடுகிறான்.

“உம்முடைய இறைவன் தேனீக்கு “மலைகளிலிருந்தும் மரங்களி லிருந்தும் ( மனிதர்களாகிய) அவர்கள் கட்டுகின்ற (தேன்கூடு முதலிய) வற்றிலிருந்தும் வீடுகளை நீ அமைத்துக்கொள்?” என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தினான். பிறகு எல்லாக்கனி மலர் வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி உன்னுடைய இறைவனின் எளிதான வழிகளில் நீ புகுந்து செல்வாயாக ! என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.


அல்குர்ஆன் (16:68) இந்த ஆயத்தில் அல்லாஹ் தேனீயைப் பற்றி குறிப்பிடும் பொழுது ”நீ சாப்பிடு” நீ நுழைந்து கொள்” என்ற அர்த்தத்தை பொதிந்துள்ள “குலீ” “ஃபஸ்லுகீ” என்ற வாசகத்தை கூறி யுள்ளான். இந்த வாசகம் பெண்பாலிடம் உபயோகப்படுத்தும் வார்த்தை களாகும். இதன்மூலம் அல்லாஹுதஆலா தேனைத் தேடிச் சென்று மலர்களின் சாறுகளை சேகரிக்கும் தேனீக்கள் பெண் தேனீக்கள் தான் என்ற விஷயத்தையும் தெரியப்படுத்துகிறான். தற்கால ஆய்வில் அறியப்படுகிற விஷயத்தை சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆன் பதிவு செய்து வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா !


மேகம் கருக்கிறது மழை வரப்பார்க்கிறது

பிரபஞ்சத்தில் அல்லாஹ் எவ்வளவோ ஆச்சரியமான விஷயங்களை வைத்திருப்பதைப் போன்று வான் மண்டலத்திலும் அல்லாஹ் ஆச்சர்யங்களை வைத்துள்ளான். அவைகளில் ஒன்று மழை பெய்வது. நீலவானில் திடீரென மேகங்கள் ஒன்று சேர்ந்து கருத்துப்போய் மழை பொழிய ஆரம்பிக்கிறது. நீரியல் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் போது “காற்றுதான் மேகங்களை ஒன்றிணைத்து – குளிர்வித்து மழை பொழிய வைக்கிறது.” என கூறுகிறார்கள். இதை நாம் செயற்கையாக வும் செய்ய முடியும். மழை பொய்த்துப் போய் வறட்சி ஏற்படும் கால கட்டத்தில் விமானத்தின் மூலம் ரசாயணப் பொருட்களைத் தூவி மேகங்களை செயற்கையாக குளிரவைத்து மழை பொழிய வைக்க முடியும் என்று கண்டுபிடித்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றார் கள். ஆக மேகங்களை காற்று ஒன்றிணைத்து குளிர்விப்பதால் மழை பொழிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இக்கருத்தை அல்லாஹுதஆலா குர்ஆனில் முன்பே பதிய வைத்துள்ளான்.


“காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாம் அனுப்பி வைத்தோம். பிறகு வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி வைத்து அதனை உங்களுக்கு நாம் புகட்டினோம்.”

-அல்குர்ஆன் ( 15:22 )

இவ்வாறு அல்லாஹுதஆலா காற்றின் மூலம் மேகங்களை குளிர வைத்து மழை பொழிய வைப்பதை குறித்து அல்லாஹுதஆலா திரு குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

அல்லாஹுதஆலா திருகுர்ஆனின் மூலம் மனித சமுதாயத்தின் முழு வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை நிரூபிப்பதைப் போன்று தற்கால நவீன அறிவியல் விஷயங்களையும் சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே தன்னில் கொண்டுள்ளது என்பதை விபரிப்பதற்காகத் தான் மேற்கண்ட ஆய்வு விஷயங்களை நாம் பதிவு செய்துள்ளோம். இது போன்று எண்ணற்ற நவீன கண்டுபிடிப்பு விஷயங்களை பற்றியும் குர்ஆன் தெரிவிக்க காத்திருக்கிறது. எனவேதான் அல்லாஹ் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? “ – அல்குர்ஆன் ( 4: 82 ) என்று கேட்கிறான்.


குர்ஆனும் நாமும்

மனித சமுதாயத்திற்கு அவன் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் முழு வழிகாட்டிய அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? குர்ஆனை அது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை போதிக்கும் நூல் என்பதைப் போன்று பள்ளிவாசல் களிலும் வீட்டில் ஒரு பெட்டியிலோ உரையிலோ போட்டு வைத்து விடுகிறோம். யாராவது இறந்து விட்டால் குர்ஆனின் ஞாபகம் நமக்கு வருகிறது. அதை ஓதி இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பித்துவிட்டால் – அத்துடன் குர்ஆனோடு நம்முடைய தொடர்பு முடிந்து விட்டது என்ற நிலையில் நாம் உள்ளோம். அஸ்தஃபிருல்லாஹ். குர்ஆனுடைய வழி காட்டுதலை மனித சமுதாயம் அலட்சியப்படுத்தியதால்தான் பாவங் களும், தீமைகளும் பல்கிப் பெருகிப் போய் உலகம் பெரும் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உணவுப் பற்றாக்குறை. பணவீக்கம் – அத்தியாவசியப்பொருள்கள் விலையேற்றம். உலகம் வெப்ப மயமாகுதல் நாட்டுக்கு நாடு அரசியல் குழப்பங்கள். இன்னும் பல பிரச்சனைகள். இவைகளெல்லாம் ஏன்? ஏன்? குர்ஆன் அதற்கு பதிலுரைக்கிறது.


“மனிதர்களுடைய கைகள் சம்பாதித்த (கெடுதலான) வற்றின் காரணத்தால் தரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் பரவி விட்டது. அவர்கள் செய்ததில் சிலதை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய் வதற்காக (இவ்வாறு செய்கிறான். இதனால் பாவங்களிலிருந்த) அவர்கள் திரும்பி விடக்கூடும்.”

-அல்குர்ஆன் ( 30:41 )

மனிதர்களுக்கு மனிதர்களே தேடிக்கொண்ட வினைகள் தான் உலகில் தற்போது நிகழும் சூழ்நிலைகள் என குர்ஆன் தெளிவாக பதிலுரைத்து விட்டது. அது போன்று முஃமினானவர்களுக்கு மத்தியில் நிகழக்கூடிய பிரச்சனைகள் பிளவுகள் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ள கருத்து வேறுபாடுகள், இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஐரோப்பிய நாடுகள் போர் தொடுக்கும் சூழ்நிலைகள் இவை களேல்லாம் எதனால்? ஏன்? இதற்கும் குர்ஆன் தெளிவான விடை தருகிறது.

“முஃமின்களே ! உங்களுக்கிடையில் நீங்கள் பிணங்கித் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள். உங்களுடைய பலம் குன்றி விடும். – அல்குர்ஆன் (8:46)

முஃமின்கள் குர்ஆனின் வழிகாட்டுதல்களை புறந்தள்ளியதின் காரணமாக சர்வர்தேச இஸ்லாமிய சமுதாயத்திடம் கருத்து வேறுபாடு, பிளை, உண்டானது. அதனால் பிற சமுதாயத்தின் பார்வையில் இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புணர்வும் தான் ஏற்பட்டுள்ளது. “உயர்வான உம்மத்” என குர்ஆனால் போற்றப்பட்ட சமுதாயம் கேவலப்பட்டு நிற்பதற்கு காரணம் குர் ஆனின் வழிகாட்டுதலை கைவிட்டது தான் காரணம்.

என்ன செய்ய வேண்டும் ?

உலகம் முழுவதும் மனித சமுதாயத்திடம் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திடம் சுபிட்சமும், மகிழ்ச்சியும் செழிப்பும் மலர வேண்டும் என்றால் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனுட னான நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். “சடங்கு நூலாக” திரு குர்ஆனைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு நம் வாழ்வின் அஸ்தி வாரமாக குர்ஆனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் அனைத்து மொழிகளிலும் திருகுர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரை களை நூற்களாகவும் குறுந்தகடு ( ) களாகவும் வெளிவந்துள்ளது. அர்த்தமும் விளக்கமும் புரிந்து குர்ஆனை ஓதி – விளங்கி, நமது வாழ்விலும் நமது சந்ததியினரின் வாழ்விலும் குர்ஆனின் வழிகாட்டு தல்களை கொண்டு வர வேண்டும். பின்பு அந்த வழிகாட்டுதல்களை பிறருக்கும் எத்தி வைக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருகுர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனை விளங்கி அதன் வழிகாட்டுதல்படி வாழ்க்கை வாழ நமக்கு வழிகாட்டுவானாக !


நன்றி : குர்ஆனின் குரல் மாத இதழ்

Friday, August 21, 2009

ரமளானின் மகிமை

ரமளானின் மகிமை

( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=144

புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.

ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.

இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:

’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’

’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’

’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’

’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’
நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும்
ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.

‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’

‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’

‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’

எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!

நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை

நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.

நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.

நோன்பின் நிய்யத்

நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.

தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:

நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.

நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

ஸஹர் – நோன்புபிடிப்பது

ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.

ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.


இஃப்தார் – நோன்பு திறப்பது

சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.

இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி – பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.


நோன்பு திறக்கும் துஆ

அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

’’யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

நோன்பின் முறித்தல்கள்

1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களா’ செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.

நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.

தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.

நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.


நோன்பை முறிக்காதவைகள்

1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்‌ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.


நோன்பின் மக்ருஹ்கள்

1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.
இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.


நோன்பு வைக்காமலிருப்பதற்கு
அனுமதிக்கப்பட்டவர்கள்

1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.
5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.
6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும்.
7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும்.
8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும்.


தராவீஹின் சட்டங்கள்

புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.

எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.

குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.

இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே
பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.

வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.

ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.

குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் – மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.


இஃதிகாப்

புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.

ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.

இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.

இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.

ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.

1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.

2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.

அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

Thursday, August 20, 2009

Biography of Prophet Muhammad sallallahu alaihi wa sallam.

Biography of Prophet Muhammad sallallahu alaihi wa sallam.

You will now read a set of 99 questions and answers Alhamdulillah. In case if you find any mistakes or errors in any questions or answers please reply back. InshaAllah the same would be rectified and resent to all.

p.b.u.h = peace be upon him { sallallahu alaihi wa sallam ]

1. When was the Prophet Muhammad (p.b.u.h.) born?
He was born on Monday, 9th or 12th Rabi Al Awwal. (Allah knows best)

2. Where was the Prophet Muhammad (p.b.u.h.) born?
In Makkah

3. What is the name of the Prophet's father?
Abdullah Ibn Abdul Muttalib.

4. What is the name of the Prophet's mother?
Aminah Bint Wahhab Ibn Abd Manaf Ibn Zahrah.

5. When and where did his (prophet's) father die?
He died in Makkah before Muhammad (p.b.u.h.) was born.

6. What is the name of the Prophet's grandfather?
Abdul Muttalib.

7. What was his granfather's position?
He was the chief of his clan Bani Hashim.

8. What is the Prophet's (p.b.u.h.) lineage up to his fifth ancestor?
He is Muhammad Ibn Abdullah Ibn Abdul Muttalib Ibn Hashim Ibn Abd
Manaf Ibn Qusai Ibn Kilab.

9. Who suckled the Prophet Muhammad (p.b.u.h.)?
First Thuyeba, the freed slave girl of his uncle Abdul Uzza known as
Abu Lahab, then Haleema Bint Abu Dhuaib, best known as Haleema Al
Sadiyah.

10. Who named the Prophet Muhammad (p.b.u.h.)?
Abdul Muttalib.

11. What did Muhammad's (p.b.u.h.) mother name him?
Ahmad.

12. Why did she (the Prophet's mother) choose this name?
Because she saw an angel in a dream calling the new-born baby Ahmad.

13. How old was Muhammad (p.b.u.h.) when his mother died?
Six years old.

14. Where did his mother take him?
She took him to Yathrib (Madinah) to visit her relatives.

15. Where did his mother die?
On her way back to Makkah, she died at Abwa and was buried there.

16. Who brought Muhammad (p.b.u.h.) back to Makkah?
His father's slave girl, Umm Aiman (May Allah be pleased with her).

17. Who took the charge of his care?
His grandfather Abdul Muttalib.

18. How long did The Prophet's grandfather take care of the Prophet Muhammad?
For two years.

19. How was his (Abdul Muttalib's) behavior with Muhammad (p.b.u.h.)?
He loved him very much and preferred him to his own sons.

20. What did Abdul Muttalib foretell about his grandson?
That he would hold a prestigious position.

21. Who took care of the Prophet (p.b.u.h.) after the death of Abdul Muttalib?
His uncle Abu Talib.

22. How old was Muhammad (p.b.u.h.) when his grandfather Abdul Muttalib died?
About eight years old.

23. When did Muhammad (p.b.u.h.) travel to Syria and with whom?
He went to Syria with his uncle Abu Talib when he was twelve years old.

24. Who was Khadijah (May Allah be pleased with her)?
She was a wealthy merchant of Makkah.

25. Why did she (Khadijah) want to marry Muhammad (p.b.u.h.)?
Because of his truthfulness and good conduct.

26. When did she (Khadijah) marry Muhammad (p.b.u.h.)?
When she was 40 years old.

27. How old was Muhammad (p.b.u.h.) at the time of the marriage?
He was 25.

28. What did he (the Prophet) give her (Khadijah) as Mahr (dowry)?
Twenty camels.

29. Was Khadijah (May Allah be pleased with her) a widow?
Yes. The Prophet (p.b.u.h.) was her third husband.

30. How was Muhammad (p.b.u.h.) known in the society?
He was known as Al Ameen (trustworthy) and Al Sadiq (truthful).

31. Did he get any sort of education?
No, he didnt get any formal education from the society, rather he was
taught by Almighty Allah.

32. What should one say when the Prophet's (p.b.u.h.) name is mentioned?
One should say Õáì Çááå Úáíå æÓáã (May the peace and blessings of
Allah be upon him).

33. How many times is the name of Muhammad mentioned in the Holy Quran?
Four times.

34. What are the names of the Prophet's (p.b.u.h.) uncles?
They are: Harith, Zubair, Abu Talib, Hamzah (May Allah be pleased
with him), Abu Lahab, Ghidaq, Maqwam, Safar and Abbas (May Allah be
pleased with him).

35. Did his uncle Abu Talib accept Islam?
No, he died a polytheist.

36. In the New Testament by what name was the Prophet (p.b.u.h.) mentioned?
By the name of Paraclete.

37. What is Kabah?
It is the oldest house of worship on the earth.

38. Who built it?
The Prophet Ibrahim and his son Ismael (May Allah be pleased with them).

39. How did Quraish arrange rebuilding of Kabah?
They divided the work among various tribes. Each tribe was
responsible for rebuilding a part of it.

40. Who laid the stones?
A Byzantine mason called Baqum.

41. Where did the Prophet (p.b.u.h.) go into seclusion?
To the Cave of Hira.

42. What was the fist stage of the revelation?
True dreams.

43. When did the first revelation come down to him?
On Monday, 21st of Ramadan, at night (August 10th, 610 AC). He was
forty years then.

44. Who brought it?
Jibrael.

45. Who were the first to embrace Islam?
Four persons: Khadijah his wife, Zaid Ibn Haritha his freed slave,
Ali Ibn Abi Talib his cousin and Abu Bakr his friend (May Allah be
pleased with them).

46. Who accepted Islam at the instance of Abu Bakr (May Allah be
pleased with him)?
Uthman Ibn Affan, Zubair Ibn Awwam, Abdur Rahman Ibn Awf, Sad Ibn Abi
Waqqaas, Talha Ibn Ubaidullah and Saeed Ibn Zaid (Umar's son-in-law)
(May Allah be pleased with them).

47. Who were the ladies to accept Islam at first?
Abbas's wife Ummaul Fadl, Abu Bakr's wife Asma Bint Umais, his
daughter Asma Bint Abi Bakr and Fatimah Bint Al Khattab Umar's sister
(May Allah be pleased with them).

48. How was the Dawah done in the beginning?
It was done in secret.

49. How many people embraced Islam in the early stage?
About forty.

50. How many years did the call in secret continue?
For three years.

51. During this period, where would the Muslims gather secretly?
They would gather secretly in the house of a Muslim called Arqam to
learn about Islam and the revelations sent down to the Prophet
(p.b.u.h.).

52. When did the Prophet (p.b.u.h.) start to preach Islam openly?
After three years when he received the revelation to that effect.

53. What was the impact of his public preaching?
The people accepted Islam increasingly.

54. What was the main miracle of the Prophet (p.b.u.h.)?
The Holy Quran.

55. Did the Prophet (p.b.u.h.) perform other miracles?
Yes, the splitting of the moon was one of them.

56. Who was Abu Jahl?
One of the Prophet's (p.b.u.h.) uncles.

57. Name some of the disbelievers of Makkah who supported the Prophet
(p.b.u.h.), but did not embrace Islam until the end.
Abu Talib, Mutim Ibn Adi and Abul Bukhtari.

58. How long did Abu Talib protect the Prophet (p.b.u.h)?
For 42 years – from the Prophet's childhood until he himself died.

59. Who was Mutim Ibn Adi?
A chief of Makkah.

60. When did he (Mutim Ibn Adi) give protection to the Prophet (p.b.u.h.)?
When the Prophet (p.b.u.h.) returned from Taif and wanted to enter Makkah.
61. When did he (Mutim Ibn Adi) die?
He was killed in the Battle of Badr.

62. Who was Abul Bukhtari?
He was a poet.

63. How did he (Abul Bukhtari) support the Prophet Muhammad (p.b.u.h.)?
He spoke out against the social boycott.

64. What lead the Muslims to emigrate to Abyssinia?
Their growing persecution at the hands of Quraish.

65. Which Surah lead to this emigration?
Surah Az Zumar.

66. When was Abul Bukhtari killed?
In the battle of Badr.

67. Who was then the King of Abyssinia?
The King of Abyssinia, known as Najjashi (the Negus), during the time
of the Prophet (p.b.u.h.) was As'hama.

68. When did the first group of Muslims leave for Abyssinia?
In Rajab, in the fifth year of Prophethood.

69. How many persons were there in the group?
12 men and 4 women.

70. How were the emigrants received in Abyssinia?
They were received warmly and hospitably.

71. When did the second group of emigrants leave for Abyssinia?
In the fifth year of Prophethood.

72. How many people formed the group?
83 men and 18 women.

73. Name a prominent companion included in this group.
Ja'far Ibn Abi Talib (May Allah be pleased with him).

74. What did Quraish do?
They despatched two envoys to Abyssinia to demand the extradition of
the emigrants.

75. How did the King respond?
He refused to extradite the Muslims and assured them of his full protection.

76. When did Umar (May Allah be pleased with him) accept Islam?
At the age of 27.

77. Who was Bilal Ibn Rabah (May Allah be pleased with him)?
He was a slave of Umayyah Ibn Khalaf.

78. What was his (Bilal Ibn Rabah's) origin?
He was of Abyssinian decent.

79. What was the name of Bilal's mother?
Hamama.

80. Who was Yaser (May Allah be pleased with him)?
He was a slave of Abu Jahl.

81. Who was Sumayyah (May Allah be pleased with her)?
She was Yaser's (a slave of Abu Jahl) wife.

82. Who was Ammar (May Allah be pleased with him)?
He was Yaser and Sumayyah's only son.

83. How did Summaya (May Allah be pleased) die?
Abu Jahl murderded her with a bayonet.

84. Who was Zaid Ibn Haritha (May Allah be pleased with him)?
He was a slave.

85. Who purchased him (Zaid Ibn Haritha)?
Khadijah's nephew Hakim Ibn Hizam purchased him and presented him to her.

86. What did Khadijah do with Zaid Bin Haritha?
She presented him to the Prophet who set him free.

87. Did Zaid Bin Haritha want to go to his parents?
No, he preferred to live with the Prophet (p.b.u.h.).

88. To whom was Zaid Bin Haritha married?
To Umma Aiman (May Allah be pleased with her).

89. Who was Ja'far?
He was the elder brother of Ali Ibn Talib (May Allah be pleased with him).

90. Where did he (Ja'far) emigrate?
To Abyssinia.

91. Who was Ali (May Allah be pleased with him)?
He was the son of Abu Talib and cousin of the Prophet (p.b.u.h.).

92. When did Ali (May Allah be pleased with him) accept Islam?
When he was 19.

93. What was he (Ali) called for his bravery?
The "Lion of Allah".

94. Whom did Ali first marry?
He first married the Prophet's (p.b.u.h.) daughter Fatimah (may Allah
be pleased with her).

95. How many sons did Ali have from her?
Two sons: Hasan and Husain (May Allah be pleased with them).

96. When did Sa'd bn Abi Waqqas (May Allah be pleased with him) become a Muslim?
When he was 19.

97. Where did Sa'd (May Allah be pleased with him) die?
He died in Al Madinah.

98. What was Sa'd's advice to Muslims?
To stand united.

99. Who was Abu Bakr's father (May Allah be pleased with him) and did
he accept Islam?
He was Uthman (May Allah be pleased with him) (Abu Quhafah). Yes, he
accepted Islam during the Conquest of Makkah.

Tuesday, August 18, 2009

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!


அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!

எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...

நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது.

அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.

ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.

இறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம்.

இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.

பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.

நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,

சுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம்

முத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.

உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!

இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.

செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.

நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.

நாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய்? என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.

நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.

இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.

நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.

சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.

கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா?

அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான்.

ஆம்! இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை.

எங்கும் எப்போதும் சுகம்! அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!! அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்!!!

ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.

வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.

நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா?

பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா?

அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான்.

அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.

பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.

கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.

உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே!

மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி.

ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.

வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.

இறுதியாக...

இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.

அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?

இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும்.

அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.

இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும்.

இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.

தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும்.

இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.

இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.

இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும்.

இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.

உறவுமுறையை பேணி வாழ வேண்டும்.

இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.

இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும்.

இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்


அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...!

தயாராகுவோம் நாம்...!

இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்!

இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!

வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்!

வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!

பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்!

இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!

புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்!

நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!

இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்!

ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!

அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்!

அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!

சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்!

சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!



பரங்கிப்பேட்டை
மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ
எம்.ஏ (அரபிக்)., எம்.ஏ (தத்துவமும் சமயமும்).,
(Kfhk; : Fitj;)

மின்னஞ்சல்கள் : abkaleel@gmail.com / abkaleel@yahoo.com / abkaleel1@gmail.com / khaleel_baaqavee@yahoo.com

வலைப்பூக்கள் : www.ulamaa-pno.blogspot.com / www.mypno.blogspot.com / www.lalpetexpress.blogspot.com / www.khaleelbaaqavee.blogspot.com / www.ppettai.blogspot.com / www.khaleel-baaqavee.blogspot.com / www.infopno.blogspot.com

இணையதளங்கள் : www.k-tic.com / www.mypno.com / www.parangipettai.com / www.muslimleaguetn.com / www.parangi.com

Saturday, August 15, 2009

www.unitedmuslimtube.com

Dear Brothers and Sisters,

Assalamu Alaikum wa Rahmathullahi wa Barakathuhu,
By the grace of Allah, we are launching the new website www.unitedmuslimtube.com today, Alhamdullillah

This website is to enhance your Islamic knowledge and to spend your valuable time usefully in the Holy month of Ramadan and throughout the years.
“Our main aim of this website is to bring unity among Muslim Ummah and to understand each other’s view. Also to bring all the lectures of world renowned English speaking Sheiks, available in various video websites in to common platform irrespective of various schools of thoughts.”

I take this opportunity to thank Brother Sabir Ahamed bin Abdul Aziz of Abu Dhabi, who spent his valuable time and helped me to accomplish this website before Ramadhan.
I request all brothers and sisters to pray for me, my family and brother Sabir Ahamed bin Abdul Aziz and his family for Allah’s forgiveness for our sins and to grant us victory in this world and hereafter.

Please enroll as a free member of this website to get new video’s updates, if you are member, you can also upload your video ‘s . For any suggestion and comments about this website, don’t hesitate to contact us on unitedmuslimtube@gmail.com
Wassalam.

Yours lovingly brother
Ahamed K. Raja
Abu Dhabi

Following Sheikh’s individual pages are available in the site and gradually more will be added.

Al Quran with English http://www.unitedmuslimtube.com/pages/alquran
Sheikh Ahmed Deedat http://www.unitedmuslimtube.com/pages/deedat
Dr.Zakir Naik http://www.unitedmuslimtube.com/pages/zakir
Sheikh Hamza Yusuf http://www.unitedmuslimtube.com/pages/hamza
Sheikh Suhaib Webb http://www.unitedmuslimtube.com/pages/suhaib
Sheikh Dr. Muhammad Tahir ul Qadri http://www.unitedmuslimtube.com/pages/drtahir
Sheikh Abu Aminah Bilal Philip http://www.unitedmuslimtube.com/pages/bilalphilip
Dr. Jamal Badawi http://www.unitedmuslimtube.com/pages/jamalbadawi
Sheikh Yusuf Estes http://www.unitedmuslimtube.com/pages/yusufestes
Sheikh Salem Al Ameri http://www.unitedmuslimtube.com/pages/salemalamry
Sheikh Hussain Yee http://www.unitedmuslimtube.com/pages/hussainyee
Brother Baba Ali http://www.unitedmuslimtube.com/pages/babaali

Monday, August 10, 2009

சகோதரத்துவம் பேணுவோம்

Jummah Quthba of 7th August 2009 by Moulana Shamsudheen Qasimi is now available in www.makkamasjid.com. Please see the attachment for details.


link : சகோதரத்துவம் பேணுவோம் - ஜும்மா குத்பா

Please send your feedback to admin@makkamasjid.com

Jaza khallahu Khairan

Wassalaam.

Makka Masjid Team

Abdul Rahman
Nazeer Ahamed
dateTue, Aug 11, 2009 at 6:49 AM
subjectRe: 07 Aug 09 - Jumma Quthba

Wa'Alaikumussalaam,

idhai pattri oru Jumma kuthba "இறை சாபதிர்க்குரிய பாவம்" enra thalaippil upload seyyapptattulladhu. www.makkamasjid.com -il senru paarkkavum.

Regards,
Abdul Rahman.

Friday, August 7, 2009

ரமழான்

ரமழான்

பதினொரு திங்கள் பகலில் பருகி பழகி
ஒரேயொரு திங்கள் அனைத்தையும் விலகி

முன்பு எண்ணம்போல் உண்டோம் !
பசித்தது புசித்தோம் !
இனி பசித்தாலும் புசியோம் !
மனதை கட்டிப்போடும் சுயகட்டுப்பாடு.

உண்ணலும் பருகலும் நிறுத்திய நோன்பு. மறந்து
உண்டினும் பருகினும் நிறைவேறும் நோன்பு.

கிறக்கத்தைக் களையும்
உறக்கத்தையும்
இரக்கமுள்ளவன்
வணக்கமாக்கினான் !
நாம் விழிக்க வேண்டும் என்பதற்கே !
விழி கொண்டு
வழி கண்டால்
"வலீ" யாகலாம் !

உறக்கம் ஏன் வணக்கம் ?
வீண் கதை, வெட்டிப்பேச்சு, பொய்
புறங்களை புறந்தள்ளிய
சிறு இறப்பு அது மிகச்சிறப்பு !

உள்புறம் காலியானால் நோன்பு'.
அது எல்லா
'புறங்'களை விட்டும் காலியானால் மாண்பு

இறை மறுப்பாரும் ரமழானில் இரை நிரப்பார்.
ஆம் இரை நிரப்ப மறுப்பார்.

வெள்ளித்திரை, விட்டால் சின்னத்திரை,
முடித்தால்தான் நித்திரை.

தெரிந்தது ரமழான் பிறை !
திறந்தது ஃபுர்கான் மறை !
அதுவா முறை ?
ஆண்டுக்கு ஒருமுறை
மட்டுமா திருமறை ?
நீக்கவே இக்குறை
நித்தமும் ஒருமுறை
எடுப்போம் இறைமறை.

ரமழானைத் தொடர்ந்தும்..
மறை நோக்கும்
நம்மை, இறை நோக்கும்.

விளக்கமின்றி விளக்கு ஒன்றே விடியல் என்று
வீழ்ந்து போகும் விட்டில்களல்ல நாம் !

தொழுகை - நாம் இறையுடன் பேசும் சாதனம்.
குர்ஆன் - இறைவனே நம்முடன் பேசும் நூதனம்.

விழி திறக்க விண்மீன்கள்
விழித்திருக்கும் வேளைகளில்...

கரை எட்டும் கண்மீன்கள்
கரையட்டும் கண்ணீர் குளங்களில்...

நோன்புக்கு அலங்காரம் வீண் வாய்க்குப் பூட்டு
அதை கண்ணுக்கும் காதுக்கும் போட்டு
அனுபவித்தால் வெளி நோன்பு
அனுபவத்தில் ஒளி நோன்பு.

ஆறுடன் ஐந்து (ஆறைந்து முப்பது-ரமழான்)
கடலில் முத்துக்கள்.
அடுத்துள்ள ஆறையும் தாண்டின்,
ஓராண்டு நோன்பு.
இரையில்லா பட்டினி
இறையில்லம் நிரம்பும் ! ரமழானாம் !

இரையுள்ள வயிறு
இறையில்லம் பட்டினி ஆம்
அது ஏனைய மாதங்கள்.

ஐந்து வயது, கடமையில்லா பருவத்திலும்
உணவில்லா இறையின்பம் துன்பத்தில் இன்பம்
எங்ஙனம் உணர்ந்தது?

பெருநாள், நல்ல திருநாள், தொடரும் மறுநாள்
உணவுண்ட இரை இன்பத்தில்
திளைத்து மூழ்கிருக்க
உணவூட்டுவாரின்றி
முன்பு போல பசி
பட்டினியால் வாடும்
இறையில்லங்கள்.
இந்நிலை முன்னர். இனி
அந்நிலை தொடராது.
ரமழானில் தொழுதோர்
காணாமல் போனோர் பட்டியலில் வாரா.

நாங்கள் இறைவனுக்காகவே
ரமழானில் தொழுது வணங்கி
நோன்பு நோற்று சுற்றிடும் வெற்றிடம் கொண்ட
வயிற்றிடம் கற்றிடும் பாடம் எம்மிடம்.
ரமழானுக்காகவே களம் இறங்கியவர்
இதோ ரமழான் முடிந்தது.
களத்திலிருந்து கழன்று கொள்க!
யார் என்றுமுள்ள இறைவனுக்காக களம் இறங்கினாரோ
எத்தனை ரமழான் சென்றாலும்
அந்த இறைவன் என்றும் இருக்கிறான்.
அவர் தைரியமாக முன்னோக்கிச் செல்லட்டும்!
மறவோம் இந்த பாலர் பாடம்.


கூத்தாநல்லூர் ஹஸன் பஸரி

Thursday, July 30, 2009

வெட்கம் ஈமானை உறுதிப்படுத்தும்!

வெட்கம் ஈமானை உறுதிப்படுத்தும்!

வெட்கம் என்பது ஈமானை உறுதிப்படுத்தும் – அல்ஹதீஸ்

ஈமானோடு – சீமான்தனத்தோடு வாழு என்பது முஸ்லிம்கள் பலரால் கூறப்படும் வாழ்த்துச் செய்தி. பெரியவர்களிடம் சிறியவர்கள் ஈமானுக்காக துஆச் செய்யுங்கள் எனக் கூறுவதும் உண்டு. ஈமான் என்பதற்கு இறைவன் உள்ளான். அவன் ஒருவனே, அவன் இணையற்றோன். அவன் தேவையில்லாதவன், அவன் நித்திய ஜீவனானவன். மனிதர்களை நல்வழிப்படுத்த தனது தூதர்களை அவன் அனுப்பியுள்ளான். அமரர்கள் வேதங்கள் அவனால் படைக்கப்பட்டவை. நன்மையும் தீமையும் அவனைக் கொண்டே ஏற்படுகின்றன என்பதோடு இஸ்லாத்தின் ஐந்து தூண்களான கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவையாவும் கடமை என நம்புவது மட்டும்தான் ஈமான் என்பது பலரின் கருத்து.

மேற்கண்ட நபிமொழிப்படி ஈமான் என்பது கடல் போன்றது. மிகப்பல கிளைகளைக் கொண்டது. எடுத்துக் காட்டாக பிறரை நாவாலும், கையாலும், துன்புறுத்தாமை, தான் விரும்புவதையே தன் சகோதரனுக்குக் கொடுப்பது, ரஸுல் (ஸல்) அவர்களை உளமார நேசிப்பது, அன்சாரி களிடம் அன்பு காட்டுவது, குழப்பங்களைத் தவிர்ப்பது, ஸலாமை, சமாதானத்தைப் பரப்புவது, கணவனிடம் நன்றியோடு நடந்து கொள்வது, இரு சாராரைச் சச்சரவி லிருந்து மீட்டு சமரசம் செய்து வைப்பது, அறப்போர் புரிவது, நிலைத்து நிற்கும் நல்லறங்கள் செய்வது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, பொது மக்களுக்கு நன்மை தரும் நற்செயல்களைப் புரிவதில் ஊக்கம் காட்டுவது போன்ற எல்லாமே ஈமான் என்பதாகக் கருதப்படும். இறைவனுக்கு மாறுபட்டு நடப்பதும், இறைவனுக்கு இணை வைத்தலும், கணவனுக்கு துரோகம் செய்தலும், விபச்சாரத்தில் ஈடுபடுதலும், பாவமான காரியங்களில் முனைப்பு காட்டுவதும், போதை தரும் பொருட்களை உட்கொள்வதும், அக்கிரமம் செய்தலும், நயவஞ்சகமும், அன்னிய ஆடவர் முன்னிலையில் சகஜமாக நடமாடுவதும், கோள், பொய், புரளி பேசுவதில் மகிழ்ச்சி கொள்வதும், பிறரைப் பரிகசிப்பதும், வெட்கப்பட வேண்டிய செயல்களாகும். இவைகளைச் செய்வதில் நாணமுற்று யார் தவிர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள் ஈமானில் உறுதி பூண்டவர்களாவர்!

பேராசிரியை. ஹாஜியா. கே. கமருன்னிஸா அப்துல்லாஹ்

Monday, July 27, 2009

ரமளானின் மூன்று பகுதிகள்

ரமளானின் மூன்று பகுதிகள்

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட்கொடையாகவும்
நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும்
கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.



அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னுகுஜைமா பாகம் 3 எண் 191

முதலாவது பத்து நாட்களில்

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்

இரண்டாவது பத்தில்

முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

மூன்றாவது பத்து நாட்கள்

நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும்

"முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள்." (அல் குர்ஆன் 66 : 6)

"எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)

அதே போல் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தான சுவனத்தில் இடம் வேண்டியும் பணிவுடனும் மனமுருகியும் நம்பிக்கையுடனும் பிராத்திக்க வேண்டும். அவற்றின்பால் கொண்டு செல்லும் நற்செயல்களில் தொடர்ந்து இறுதி மூச்சுவரை ஈடுபட உறுதி பூண்டு உதவி கோரி பிராத்திக்க வேண்டும். இதையும் ரமலானிலும் ரமலான் அல்லாத ஏனைய நாட்களிலும் தொடர்ந்து கடைப்பிடித்திடல் வேண்டும்.

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவுக்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு போPத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.


ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு

1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் து}தரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
இன்னும் சில அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

3) நபி(ஸல்)அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ''ஸஹர் உணவு உண்பதுதான்"" என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது "வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்" இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!

Saturday, July 25, 2009

அல்குர்ஆனின் மாதம்

அல்குர்ஆனின் மாதம்


முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான்.

இது நோன்பின் மாதமாகும்,

இது அல்குர்ஆனின் மாதமாகும்,

இது பொறுமையின் மாதமாகும்,

இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,

இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,

இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

இப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: 'எண்ண முடியுமான சில நாட்களாகும்' (2: 184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும். அதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும் போது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்துவான்!.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை
மார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:

ரமழான் மாதத்தின் சிறப்பு

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம், சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும்,
நரகத்திற்குரியவர்கள் விடுதலை,
பாவங்களுக்கு பரிகாரம், நன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு,
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு,
நன்மையில் நிறைவான மாதம்...

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு

முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு,நோன்பு பரிந்து பேசும்,
நோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை,
கணக்கின்றி கூலி வழங்கப்படும்,நோன்பின் கூலி சுவர்க்கம்,நரகத்தை விட்டு பாதுகாப்பு,
மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்,
நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி,கஸ்தூரியை விட சிறந்த வாடை,
நோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு...

நோன்பாளி செய்யவேண்டியவைகள்

தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்,
அல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்
ஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்
தான தர்மம் செய்தல் ,,அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்

Friday, July 24, 2009

த‌மிழ் இஸ்லாமிக் ஆடியோவில் ம‌வ்ல‌வி உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் சொற்பொழிவுக‌ள்

த‌மிழ் இஸ்லாமிக் ஆடியோவில் ம‌வ்ல‌வி உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் சொற்பொழிவுக‌ள்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்தின் த‌லைவர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஃபாஜில் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ மார்ச் மாத‌ம் அமீரக‌ம் வ‌ருகை புரிந்தார்.
அப்பொழுது அவ‌ர் ம‌லேசியா வானொலிக‌ளில் ப‌ங்கேற்று ஒலிப‌ர‌ப்பான‌ 'இஸ்லாமிய‌க் குடும்ப‌ம்' எனும் நிக‌ழ்ச்சிக‌ளின் கேஸ‌ட்டுக‌ளைக் கொண்டு வ‌ந்தார்.
அத‌னை கேஸ‌ட்டுக‌ளில் இருந்து எம்பி3 க்கு மாற்றி த‌ற்பொழுது உல‌க‌ ம‌க்க‌ள் பார்க்கும் கேட்டு ப‌ய‌ன்பெறும் வ‌ண்ண‌ம்

http://www.tamilislamicaudio.com/


http://www.tamilislamicaudio.com/audioall.asp?lang=ln1


எனும் இணைய‌த்த‌ள‌த்தில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
இப்ப‌ணிக்காக‌ துபாய் டிவியில் ப‌ணிபுரிந்து வ‌ரும் நெல்லை ஏர்வாடி ச‌கோத‌ர‌ர் பீர் முஹ‌ம்ம‌து ந‌ம‌து ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் மூல‌ம் ந‌ன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




1. ரமளானில் மலேசியா வானொலியில் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி


2. ரமளானில் மலேசியா வானொலியில் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.

3. பிள்ளை வளர்ப்பு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு.

4. நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசியா வானொலி‍‍‍‍‍-6ல் ந‌டைபெற்ற‌ சிற‌ப்புக் க‌விய‌ர‌ங்க‌ம். க‌விஞ‌ர்க‌ள்: க‌.மு.அன்வ‌ர் (த‌லைமை), ஹாஜி உம‌ர் ஜாஃப‌ர், மைதீன் சுல்தான், தென்ற‌ல் கவிஞ‌ர் அலாவுத்தீன்

5.மலேசியா வானொலியில் ந‌டைபெற்ற‌ இஸ்லாமிய‌ புத்தாண்டின் சிற‌ப்புக் க‌விய‌ர‌ங்க‌ம். க‌விஞ‌ர்க‌ள்: க‌.மு.அன்வ‌ர் (த‌லைமை), ஹாஜி உம‌ர் ஜாஃப‌ர், ஹாஜி உ.க.அப்துல் ர‌ஹ்மான், மைதீன் சுல்தான்.


and more

Friday, June 26, 2009

ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் நிர்வாகிக‌ள்

ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் நிர்வாகிக‌ள்

நிர்வாகிக‌ள்
ம‌ற்றும்
செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ள்
25 ஜுன் 2009














துபாய் - ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகக் குழுக் கூட்டம்

துபாய் - ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகக் குழுக் கூட்டம்

25 ஜுன் 2009
வியாழக்கிழமை
அஸ்கான் டி பிளாக்
துபாய்