Saturday, July 3, 2010

இந்நாளுக்கு - ஈடுஉண்டோ?

இந்நாளுக்கு - ஈடுஉண்டோ?

நோக்கத்தில் பூக்கும் ஆக்கம் -நோன்பாளர் பக்கம் நிற்கும்!
நோட்டத்தில் நாட்டம் காட்டும் -நோன்பாளர் வாட்டம் காக்கும்!
தேட்டத்தில் திருவருள் காட்டும் -தெய்வீகம் உய்வீகம் பூக்கும்!
வட்டத்தில் வாஞ்சை வளரும் -வளருகின்ற வாகை நோக்கம்!

முப்பது நாள் வாழும் வாழ்க்கை –முனைப்பான ஞான சேர்க்கை!
எப்போதும் ஈமான் இதயம் -இருந்திடும் தீனின் வாழ்க்கை!
தப்பாது எடுத்தடி வைக்கும் -தகமையே உள்ளின் ஓர்மை!
செப்பிடும் மொழியின் நன்மை –சேர்த்திடும் இன்பச்செம்மை!

முழு ஆண்டு வாழ்வதற்கு –முழப்பயிற்சி நோன்பின் மான்பு!
பழுதறவே வாழ்க் கற்கும் -பக்குவமே விரத வேள்வி!
தொழுது இறையை தூய்மை பெறுதல் -துன்யாவின் இன்ப மகிழ்ச்சி!
கெழுதகையாய் ஈகை தந்த –கிளர்ச்சியதே வாழ்வின் புரட்சி!

ஈகையின் ஏற்றம் சொல்லும் -எழில் அதுவே ஈதுபெருநாள்!
வாகையின் வளர்ச்சிக்குக் காட்டும் -வனப்பு அதுவே ஈதுபெருநாள்!
தோகையாய் வண்ணம் மின்னும் -தூய்மை அதே ஈதுபெருநாள்
ஆஹா…! இந்நாளுக்கீடு –அகிலத்தில் வேறு உண்டோ?


ஒருவனுக்கு இறைவன் உபகாரம் செய்து அதற்கு
அவன் நன்றி கடனுக்காக அல்ஹம்துலில்லாஹ் என்று கூறு
வானேயானால் அவனுக்கு அல்லாஹ் முதலில் வழங்கியதை
விட அதிகமான உபகாரங்களை கொடுத்து விடுகிறான்.